search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பா.ஜனதா ஆட்சி"

    பா.ஜனதா ஆட்சியிலும் ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து மத்திய மந்திரி விளக்கம் அளித்தார். #Spectrum #ManojSinha
    புதுடெல்லி:

    கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கையில் ஒரு தகவல் கூறப்பட்டு இருந்தது.

    அதில், ‘முதலில் வந்தவர்களுக்கு முதலில் ஒதுக்கீடு’ என்ற கொள்கை அடிப்படையில், கடந்த 2015-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சியில், ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு நுண்ணலை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், இது, தொலைத்தொடர்பு துறை நியமித்த குழுவின் சிபாரிசுகளுக்கு முரணானது’ என்றும் கூறப்பட்டு இருந்தது.

    இதனால், பா.ஜனதா ஆட்சியிலும் ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

    தொலைத்தொடர்பு துறையின் தவறான ஒதுக்கீட்டால், மத்திய அரசுக்கு ரூ.560 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி கூறியது.

    இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு மத்திய தொலைத்தொடர்பு துறை மந்திரி மனோஜ் சின்கா மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    ‘முதலில் வந்தவர்களுக்கு முதலில் ஒதுக்கீடு’ என்ற கொள்கைப்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட ஸ்பெக்ட்ரம் உரிமங்களை கடந்த 2012-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. அந்த தீர்ப்பு, ஸ்பெக்ட்ரம் சம்பந்தப்பட்டது.

    நுண்ணலை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கு அந்த தீர்ப்பு பொருந்தாது.

    இதுவரை, நுண்ணலை ஸ்பெக்ட்ரம் உரிமங்கள், ஏலமுறையில் விற்கப்பட்டதே இல்லை. நிர்வாக வசதிப்படிதான் விற்கப்பட்டுள்ளன. அந்த ஒரு நிறுவனத்துக்கு மட்டுமின்றி, தகுதியான எல்லா நிறுவனங்களுக்கும் அந்த தீர்ப்புக்கு முன்பும், பிறகும் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமும் (டிராய்) இந்த சிபாரிசுகளையே செய்துள்ளது.

    எனவே, எந்த ஊழலும் நடக்கவில்லை. இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது.

    நுண்ணலை ஸ்பெக்ட்ரமை ஏலமுறையில் விற்பது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை, அதுபற்றி பரிசீலிக்கவும் இல்லை. ஸ்பெக்ட்ரமுக்கு பணம் செலுத்தும் கால அவகாசத்தை 16 ஆண்டுகளாக அதிகரித்ததால் நன்மையே ஏற்படும். இதனால், ரூ.74 ஆயிரத்து 446 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.

    இவ்வாறு மனோஜ் சின்கா கூறினார்.

    மாணவர்களுக்கு ஆசிரியர் மதிப்பெண் வழங்குவது போல், மோடி ஆட்சியில் ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு மதிப்பெண் என்று ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் மார்க் போட்டு இருக்கிறார். #RahulGandhi #Modi #ReportCard
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சி 4 ஆண்டுகளை நிறைவு செய்ததை, அக்கட்சியினர் கொண்டாடி வருகிறார்கள்.

    இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மோடி ஆட்சியை விமர்சித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார். மாணவர்களுக்கு ஆசிரியர் மதிப்பெண் வழங்குவது போல், மோடி ஆட்சியில் ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு மதிப்பெண் என்று ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் மார்க் போட்டு இருக்கிறார்.



    விலைவாசியை கட்டுப்படுத்துதல், வேளாண்மை, வெளிநாட்டு கொள்கை உள்ளிட்ட பெரும்பாலான துறைகளில் மோடி அரசு தோல்வி அடைந்து விட்டதை குறிக்கும் வகையில் அந்த துறைகளுக்காக மோடிக்கு ‘எப்‘ கிரேடு வழங்கி இருக்கிறார். தன்னை முன்னிலைப்படுத்தும் வகையிலான கோஷங்களை முன்வைப்பதில் மோடி சிறந்து விளங்குவதாக கூறி அதை கேலி செய்யும் வகையில், அதற்காக அவருக்கு ராகுல் காந்தி ‘ஏ பிளஸ்’ கிரேடு வழங்கி இருக்கிறார்.  #RahulGandhi #Modi #ReportCard
    கர்நாடகாவில் பா.ஜனதா நிச்சயமாக ஆட்சி அமைக்கும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். #tamilisai #karnatakaelection #bjp

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியை அடுத்த ஊத்துப்பட்டி கிராமத்தில் உள்ள சற்குரு மகராஜ் சங்கர பாண்டி சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடக தேர்தலில் நேற்று வெளியான கருத்து கணிப்பு தொங்கு சட்டசபை அமையும் என்றும், பா.ஜனதா அதிக இடங்களை பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது. நிச்சயமாக கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சி அமைக்கும். சுப்ரீம் கோர்ட்டு காவிரியில் இருந்து 4 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டும், கர்நாடக காங்கிரஸ் ஆட்சி திறக்க வில்லை.

    கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் தான் காவிரிக்கு முடிவு ஏற்படும். தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். 94-ம் ஆண்டு இதற்கு அனுமதி கொடுத்தது காங்கிரஸ் ஆட்சி. தி.மு.க. ஆட்சியில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியது.

    அ.தி.மு.க. ஆட்சியில் ஸ்டெர்லைட்டுக்கு கூடுதல் நிலம் வழங்கப்பட்டது. இந்த பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் முடிவெடுக்க முடியாது. சுப்ரீம் கோர்ட்டு தான் முடிவெடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியாது. பா.ஜ.க. விரைவில் அமைக்கும். தீப்பெட்டி தொழிலுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து வரிவிலக்கு பெறுவது குறித்து பரிசீலிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #tamilisai #karnatakaelection #bjp

    ×